பஞ்சாப்: பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது

பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர் பகுதியில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர் பகுதியில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
 இது தொடர்பாக, பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
 பாகிஸ்தானின் டோபா டேக் சிங் மாவட்டத்திலுள்ள கமாலியா கிராமத்தைச் சேர்ந்த யாகூப் (38) என்பவர், இந்திய எல்லைப் பகுதி அருகே வெள்ளிக்கிழமை இரவு சந்தேகத்துக்கு இடமான வகையில் திரிந்துகொண்டிருந்தார்.
 இதைத் தொடர்ந்து, எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து ஆவணங்கள் சிலவற்றைக் கைப்பற்றியுள்ளோம். இந்த விவகாரம் தொடர்பாக, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அந்த அதிகாரி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com