காஷ்மீருக்கு கூடுதலாக 8 ஆயிரம் ராணுவ வீரர்கள்: குடியிருப்புப் பகுதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் குடியிருப்புப் பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 
காஷ்மீருக்கு கூடுதலாக 8 ஆயிரம் ராணுவ வீரர்கள்: குடியிருப்புப் பகுதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370-வது மற்றும் 35ஏ சட்டப் பிரிவுகளை திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பாணை குடியரசுத் தலைவர் கையெழுத்துடன் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இதனை அறிவித்தார். இதற்கு காங்கிரஸ், பிடிபி, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், உத்தரப் பிரதேசம், ஒடிஸா, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கூடுதலாக 8 ஆயிரம் துணை ராணுவப் படையினரை காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளுக்கு செல்லுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சுமார் 60 ஆயிரம் வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக மேலும் பல ஆயிரம் வீரர்களை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ராணுவம், விமானப்படை ஆகியவை தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, பாதுகாப்பு காரணங்கள் தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலர்கள், முதன்மை இயக்குநர்கள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் குடியிருப்புப் பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதுபோன்று நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் பாதுகாப்பில் அதிக அக்கறை மற்றும் கவனம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com