காஷ்மீர் ஆளுநருடன் அஜித் தோவல் சந்திப்பு: பாதுகாப்பு குறித்து ஆலோசனை

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கைச் சந்தித்து மாநிலத்தில் நிலவும் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.
காஷ்மீர் ஆளுநருடன் அஜித் தோவல் சந்திப்பு: பாதுகாப்பு குறித்து ஆலோசனை


தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கைச் சந்தித்து மாநிலத்தில் நிலவும் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.   

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஆளுநர் சத்யபால் மாலிக்கை இன்று (செவ்வாய்கிழமை) ஆளுநர் மாளிகையில் வைத்து சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 

"நாடாளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், காஷ்மீரில் நிலவும் உள்நாட்டு மற்றும் எல்லைப் பாதுகாப்பு நிலவரம் குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர். பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, பொது மக்களின் பாதுகாப்பு குறித்து இருவரும் வலியுறுத்தினர். எதிர்பாராதவிதமாக ஏதேனும் சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் அதை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வு, எச்சரிக்கை மற்றும் பல்வேறு துறைகளின் தயார் நிலை குறித்தும் அழுத்தமாக பேசப்பட்டது" என்றார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் எனும் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com