திருமலை ஏழுமலையானின் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் இரண்டு பேர் ரூ. 14 கோடியை வெள்ளிக்கிழமை நன்கொடையாக வழங்கினர். இதற்கான வரைவோலையை அவர்கள் ஏழுமலையானைத் தரிசித்த பின் ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான சிறப்பு அதிகாரி தர்மாரெட்டியிடம் வழங்கினர்.