இந்தியா
குஜராத்தில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து 4 பேர் பலி
குஜராத்தில் 3 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
குஜராத்தில் 3 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
குஜராத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை காரணமாக கேடா மாவட்டத்தில் பிரகதிநகரில் 3 மாடி கட்டடம் நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து அதில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுவரை 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
எனவே, இடிபாடுகளை அகற்றும் பணியில் தீயணைப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.