தில்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தின் கம்பீரத்தை மேம்படுத்திக் காட்டும் வகையில் பொருத்தப்பட்ட புதிய எல்இடி விளக்கமைப்புகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
நாடாளுமன்றக் கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த புதிய எல்இடி விளக்குகளை, பிரதமர் மோடி ரிமோட் கன்ட்ரோல் உதவியோடு துவக்கி வைத்தார். அப்போது மூவர்ணக் கொடி நிறத்தில் நாடாளுமன்றம் மின்னியது.
அதன் அழகிய வண்ணத்தை ரசித்த மோடி உள்ளிட்ட எம்.பி.க்களும், முக்கியத் தலைவர்களும் கைதட்டி ரசித்தனர்.
Prime Minister @narendramodi inaugurates the facade lighting of Parliament House this evening.