ஜப்பான் நாட்டின் டோஹோகு பகுதியில் உள்ள ஆமோரி நகரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.4 அலகாக பதிவானது. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி அச்சத்துடன் தெருக்களுக்கு வந்தனர்.
சுமார் 90 கிலோ மீட்டர் வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் தெரிய வந்த நிலையில், நிலநடுக்கத்தால் அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்தும், பொருட்கள் இழப்பு பற்றியும் அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை தெரியவில்லை.