உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் புதன்கிழமை மாற்றம் செய்யப்பட்டது.
உத்தரப் பிரதேச அரசு பொறுப்பேற்ற பிறகு, மாநில அமைச்சரவை முதல் முறையாக புதன்கிழமை மாற்றப்பட்டது. பதவியேற்பு விழா காந்தி அரங்கில் காலை 11 மணிக்கு நடைபெற்றது.
முதல்வராக யோகி ஆதித்யநாத் கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதவியேற்றார். அதன்பிறகு, முதல் முறையாக தனது அமைச்சரவையை யோகி ஆதித்யநாத் தற்போது மாற்றி அமைத்தார்.
இதில் 23 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களில் 6 பேருக்கு கேபினட் அந்தஸ்துடன் கூடிய அமைச்சரவை ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.