கர்நாடக சட்டப்பேரவையிலேயே ஆபாச விடியோ பார்த்தவர் துணை முதல்வராக செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகளிர் காங்கிரஸார் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுதொடர்பாக கர்நாடக மகளிர் காங்கிரஸ் தலைவி புஷ்மா அமர்நாத், ஆர்ப்பாட்டத்தின்போது பேசியதாவது:
கடந்த 2012-ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த விவகாரத்தில் ஜெ.கிருஷ்ண பலேமார், பாட்டீல் மற்றும் லஷ்மண் சாவாடி ஆகியோர் ஆதாரத்துடன் பிடிபட்டனர்.
எனவே லஷ்மண் சாவாடி, கர்நாடக மாநில துணை முதல்வராக செயல்பட தகுதியற்றவர். எனவே அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
முன்னதாக, பேரவையில் ஆபாச படம் பார்த்தது தொடர்பாக, ரேவ் பார்ட்டி தொடர்பான ஆபத்துகளை அறிந்துகொள்ளவே அதுதொடர்பான விடியோ பதிவுகளை பார்த்ததாக லஷ்மண் சாவாடி விளக்கமளித்திருந்தது நினைவுகூரத்தக்கது.