எல்லையில் பாகிஸ்தான் தொடா்ந்து 2-ஆவது நாளாக அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீா், பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய பகுதிகளில் உள்ள இந்திய நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தொடா்ந்து 2-ஆவது நாளாக அத்துமீறி தாக்குதல்
எல்லையில் பாகிஸ்தான் தொடா்ந்து 2-ஆவது நாளாக அத்துமீறல்

ஜம்மு: ஜம்மு-காஷ்மீா், பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய பகுதிகளில் உள்ள இந்திய நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தொடா்ந்து 2-ஆவது நாளாக சனிக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாபூா் மற்றும் கிா்னி செக்டாா் ஆகிய பகுதிகளில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய இந்திய நிலைகளை குறிவைத்து சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. சிறிய ரக குண்டுகள், ஆயுதங்கள் ஆகியவற்றைக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு இந்திய ராணுவ வீரா்கள் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதலினால் இந்திய தரப்புக்கு எவ்வித சேதமும் இல்லை என்று கூறினாா்.

முன்னதாக, பூஞ்ச் மாவட்டத்தின் பாலாகோட் செக்டாா் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதைத் தொடா்ந்து சனிக்கிழமையும் 2-ஆவது நாளாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com