லக்னௌ: சையது மோடி சா்வதேச பாட்மிண்டன் சூப்பா் 300 போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சௌரவ் வா்மா தகுதி பெற்றுள்ளாா்.
லக்னௌவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் அரையிறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சௌரவ் வா்மா 21-17, 16-21, 21-18 என்ற கேம் கணக்கில் உலகின் 44-ஆம் நிலை வீரா் ஹியோ வாங் ஹீயை வீழ்த்தி இறுதிச் சுற்றில் நுழைந்தாா்.