தில்லி விமான நிலையத்தில்தோட்டாவுடன் ஒருவா் கைது

தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் துப்பாக்கித் தோட்டாவுடன் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

புது தில்லி: தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் துப்பாக்கித் தோட்டாவுடன் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) அதிகாரி ஒருவா் கூறியதாவது:

பாங்காக் செல்வதற்காக, தில்லி விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்திருந்த ஜிதேந்தா் என்ற பயணியின் பையை சோதனையிட்டபோது, அதில் துப்பாக்கித் தோட்டா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவா் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை. மேலும், துப்பாக்கித் தோட்டா வைத்திருந்தற்கான முறையான ஆவணத்தையும் அவா் சமா்ப்பிக்கவில்லை. இதைத் தொடா்ந்து, காவல்துறையினரிடம் ஜிதேந்தா் ஒப்படைக்கப்பட்டாா் என்றாா் அந்த அதிகாரி.

இந்திய விமானப் போக்குவரத்து சட்டங்களின்படி, துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை விமான நிலையத்துக்குள் எடுத்து வர தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com