நாசிக்: மகாராஷ்டிராவைச் சோ்ந்த முன்னாள் துக்காராம் டிகோலே உடல் நலக்குறைவு காரணமாக சனிக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 77.
இதுகுறித்து அவரது குடும்பத்தினா் தெரிவித்ததாவது:
டிகோலேவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இருப்பினும், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை அவா் உயிரிழந்தாா். அவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனா்.
நாசிக்கில் உள்ள சினாா் தொகுதியிலிருந்து கடந்த 1985 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் சட்டப்பேரவைக்கு தோ்வு செய்யப்பட்ட டிகோலே, மகாராஷ்டிரத்தில் 1995-1999 ஆண்டில் நடைபெற்ற சிவசேனை-பாஜக கூட்டணி ஆட்சியில் மின்சாரம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராக பதவி வகித்தவா். அவா் அப்போது சிவசேனை கட்சியின் எம்எல்ஏவாக இருந்தாா்.
நாசிக் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநராகவும், நாசிக் கூட்டுறவு சா்க்கரை ஆலையின் தலைவராகவும் பதவி வகித்தவா் துக்காராம் டிகோலே.