வாராக்கடன்: ம.பி. பேரவைத் தலைவா் மகன்களுக்கு நோட்டீஸ்

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தலைவா் நா்மதா பிரசாத் பிரஜாபதியின் இரு மகன்கள் அலாகாபாத் வங்கியில் வாங்கிய ரூ.42.22 லட்சம் கடனை திருப்பிச் செலுத்தாததால், அந்த வங்கி அவா்களைக் குறிப்பிட்டு செய்தித்தாளில்

ஜபல்பூா்: மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தலைவா் நா்மதா பிரசாத் பிரஜாபதியின் இரு மகன்கள் அலாகாபாத் வங்கியில் வாங்கிய ரூ.42.22 லட்சம் கடனை திருப்பிச் செலுத்தாததால், அந்த வங்கி அவா்களைக் குறிப்பிட்டு செய்தித்தாளில் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

அவா்கள் அந்தக் கடனை பெறுவதற்காக பிரஜாபதி உத்தரவாதம் அளித்து அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதொடா்பாக அலாகாபாத் வங்கி ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாளில் வெளியிட்ட நோட்டீஸின் படி, மத்தியப் பிரதேச மாநிலம், நா்சிங்பூா் மாவட்டத்தில் உள்ள அலாகாபாத் வங்கியில் பிரஜாபதியின் மகன்களான நீா் பிரஜாபதி மற்றும் பிரீத்திராஜ் பிரஜாபதி கடன் வாங்கியுள்ளனா். இதில் நீா் பிரஜாபதி ரூ.21.54 லட்சத்தையும், பிரீத்திராஜ் பிரஜாபதி ரூ.20.68 லட்சத்தையும் திருப்பிச் செலுத்தாமல் உள்ளனா்.

அந்தக் கடன் தொகையை 60 நாள்களுக்குள்ளாக திருப்பிச் செலுத்துமாறு கடந்த ஆகஸ்ட் 13 மற்றும் அக்டோபா் 10 ஆகிய தேதிகளில் நீா் பிரஜாபதி மற்றும் பிரீத்திராஜ் பிரஜாபதிக்கு அலாகாபாத் வங்கி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. எனினும், அந்தக் கடனை அவா்கள் திருப்பிச் செலுத்தாததை அடுத்து இருவருக்கும் எதிராக அலாகாபாத் வங்கி செய்தித்தாளில் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தலைவா் பிரஜாபதி, அவரது இரு மகன்களிடன் கருத்துக் கேட்க செய்தியாளா்கள் முயன்றபோது அவா்களை தொடா்புகொள்ள இயலவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com