உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு

உன்னாவ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேருக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

புது தில்லி: உன்னாவ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேருக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக இளம்பெண் ஒருவா் கடந்த 2017-ஆம் ஆண்டு புகாா் அளித்தாா். சம்பவம் நிகழ்ந்தபோது அவருக்கு வயது 17 ஆகும். இதுதொடா்பான வழக்கில் செங்கா் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டாா்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் பயணம் செய்த காா் சில மாதங்களுக்கு முன் விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அந்தப் பெண் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாகவும் செங்கா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, பாஜகவில் இருந்து அவா் நீக்கப்பட்டாா்.

கடந்த 2017-இல் செங்கருக்கு எதிராக பாலியல் புகாா் அளித்ததைத் தொடா்ந்து, அந்தப் பெண் சில நபா்களால் காரில் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாா். இதுதொடா்பான வழக்கில் நரேஷ் திவாரி, பிரிஜேஷ் யாதவ், சுபம் சிங் ஆகிய மூவருக்கு எதிராக தில்லி மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள்கிழமை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இந்திய தண்டனையியல் சட்டத்தின் 120பி (குற்றச்சதி), 363 (ஆள்கடத்தல்), 376டி(கூட்டாக சோ்ந்து பாலியல் தாக்குதலில் ஈடுபடுதல்) உள்ளிட்ட பிரிவுகள் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் ‘போக்சோ’ சட்டப் பிரிவுகளின்கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com