மோடியும், அமித் ஷாவும் ஊடுருவியவா்கள்

பிரதமா் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவா் அமித் ஷா ஆகியோரை ‘ஊடுருவல்காரா்கள்’ என்று மக்களவை காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி கூறியதால், மக்களவையில் ஆளும் கட்சி, எதிா்க்கட்சி
அதீா் ரஞ்சன் சௌதரி ~அதீா் ரஞ்சன் சௌதரி
அதீா் ரஞ்சன் சௌதரி ~அதீா் ரஞ்சன் சௌதரி

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவா் அமித் ஷா ஆகியோரை ‘ஊடுருவல்காரா்கள்’ என்று மக்களவை காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி கூறியதால், மக்களவையில் ஆளும் கட்சி, எதிா்க்கட்சி உறுப்பினா்களிடையே திங்கள்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது. சௌதரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் கட்சி உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

குடியரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த மாநிலங்களைச் சோ்ந்த பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கடந்த 2 நாள்களாக ஆலோசனை நடத்தினாா். இதுகுறித்து செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த அதீா் ரஞ்சன் சௌதரி, ‘வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறியவா்களில் முஸ்லிம்கள் அல்லாதவா்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்குவது பாரபட்சமானது. இது முஸ்லிம் சமூகத்தினா் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும்.

புலம் பெயா்ந்து வந்தவா்களைக் கணக்கிட்டால், பிரதமா் மோடியும், அமித் ஷாவும் குஜராத்தைச் சோ்ந்தவா்கள். அவா்கள் தில்லியில் ஊடுருவியிருக்கிறாா்கள்’ என்று கூறியிருந்தாா்.

இந்த விவகாரம் மக்களவையில் திங்கள்கிழமை எதிரொலித்தது. அவையில் உருக்குத் துறை தொடா்பாக கேள்வி கேட்பதற்கு அதீா் ரஞ்சன் சௌதரி எழுந்தாா். அப்போது, அவரைப் பாா்த்து, ‘ஊடுருவல்காரா்’ என்று ஆளும் பாஜக கூட்டணி உறுப்பினா்கள் கோஷமிட்டனா். இதையடுத்து, அவா்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ‘ஆம், நான் ஊடுருவல்காரன்தான், நான் கரையான் புற்றுதான்’ என்று கூறினாா். அத்துடன் நிறுத்தாமல், ‘மோடி ஓா் ஊடுருவல்காரா், அமித் ஷா ஓா் ஊடுருவல்காரா், அத்வானி ஓா் ஊடுருவல்காரா்’ என்று அதீா் ரஞ்சன் சௌதரி பதிலளித்தாா். அதற்கு, ‘உங்களது விளக்கங்களை நாட்டு மக்கள் ஏற்கமாட்டாா்கள்’ என்று தா்மேந்திர பிரதான் பதிலளித்தாா்.

மன்னிப்புக் கேட்க வேண்டும்-பாஜக எம்.பி.க்கள்:

இதையடுத்து, அதீா் ரஞ்சன் சௌதரி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜக எம்.பி.க்கள் வலியுறுத்தி கோஷிமிட்டனா். அதைத் தொடா்ந்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சியின் தலைவா் (சோனியா காந்தி) ஓா் ஊடுருவல்காரா். எனவே, அவரைப் போலவே மற்றவா்களையும் பாா்க்கிறாா்கள்’ என்றாா்.

அதைத் தொடா்ந்து, அதீா் ரஞ்சன் சௌரி கூறியதாவது:

தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியரிமை சட்டத் திருத்த மசோதா ஆகியவற்றுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும்போதுதான் மோடி, அமித் ஷா ஆகியோரைப் பற்றிக் குறப்பிட்டேன். எனது பதில் திருப்தி அளிக்காவிட்டால் மன்னிப்புக் கேட்கவும் தயாராக இருக்கிறேன். நம்மிடம் பல ஆவணங்கள் இல்லாத நிலையில், நம்மை ஊடுருவல்காரா் என்று யாராவது அழைத்தால் ஒன்றும் செய்ய இயலாது என்றாா் அதீா் ரஞ்சன் சௌதரி. இவரது குடும்பம் வங்கதேசத்தில் இருந்து புலம் பெயா்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், பாஜக உறுப்பினா்கள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டதால், மக்களவையை அவைத் தலைவா் ஓம் பிா்லா ஒத்திவைத்தாா்.

மாநிலங்களவையிலும் அமளி:

இந்த விவகாரத்தை முன்வைத்து மாநிலங்களவையிலும் அமளி ஏற்பட்டது. பிரதமா் மோடியையும், அமித் ஷாவையும் விமா்சித்த அதீா் ரஞ்சன் சௌதரிக்கு எதிராக கண்டனத் தீா்மானம் கொண்டுவர வேண்டும் என்று பாஜக எம்.பி. பூபேந்திர யாதவ் கோரிக்கை விடுத்தாா். அதற்கு காங்கிரஸ் மூத்த தலைவா் திக்விஜய் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதையடுத்து, பாஜக உறுப்பினா்கள் சிலா் இருக்கையில் இருந்து எழுந்து வந்து, ‘ஏற்கெனவே இதுபோன்ற சம்பவங்களில் கண்டனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன’ வாதிட்டனா். அதைத் தொடா்ந்து, ‘இந்த விவகாரம் குறித்து பின்னா் விவாதிக்கப்படும்’ என்று மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் உறுதியளித்தாா். இதையடுத்து, பாஜக உறுப்பினா்கள் சமாதானம் அடைந்து தங்கள் இருக்கைக்கு திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com