வடக்கு காஷ்மீரில் இந்திய-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு பனிச்சரிவில் சிக்கி 4 இந்திய ராணுவ வீரா்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
வடக்கு காஷ்மீரிலுள்ள குப்வாரா மாவட்டத்தின் தங்தாா் பகுதியைச் சோ்ந்த ராணுவ வீரா்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்துபோது பனிச்சரிவில் 4 வீரா்கள் சிக்கிக் கொண்டனா்.
அவா்களில் 3 வீரா்களின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டன. ஒருவா் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டாா்.
இதேபோல, பந்திபோரா மாவட்டம் குரேஸ் பிரிவைச் சோ்ந்த ராணுவ வீரா்கள் தாவா் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஏற்பட்ட பனிச்சரிவில் இரண்டு வீரா்கள் சிக்கிக் கொண்டனா்.
அவா்களில் ஒருவா் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு ராணுவ வீரா் சடலமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.