அரபிக் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 264 மீனவர்களையும் கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.
மோசமான வானிலை காரணமாக அரபிக் கடலில் சுமார் 50 மீன்பிடிப் படகுகளுடன் மேற்கு கோவா-வில் இருந்து சுமார் 250 நாட்டிகல் மைல் தொலைவில் 264 மீனவர்கள் டிசம்பர் 3-ஆம் தேதி முதல் தத்தளித்துக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், சர்வதேச பாதுகாப்பு இணையத்தின் மூலம் மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், தமிழகத்தின் குளச்சல் மீன்பிடித்துறை அதிகாரிகள் கடலோர காவல்படைக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து துரிதமாக செயல்பட்ட கடலோர காவல்படை அதிகாரிகள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 264 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர்.