ஆந்திர மாநிலம் திருப்பதியில் 70 ஆண்டுகள் பழமையான கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் சனிக்கிழமை 70 ஆண்டுகள் பழமையான குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. இரண்டு மாடி அடுக்குக் குடியிருப்பில் நான்கு குடும்பங்கள் வசித்து வருகின்றன. விபத்து நடந்தபோது அந்த நான்கு குடும்பத்தினருமே வீட்டில் இல்லாததால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இடிந்து விழும் நிலையில் இருக்கும் கட்டிடங்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உள்ளூர் வாசிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.