அசாமில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
அசாம் மாநிலத்தில் திப்ருகார் மாவட்டத்தில் நஹர்காத்தியா ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் வந்துகொண்டிருந்தபோது, திடீரென அதன் 7 பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் அவ்வழியாக வரும் 19 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த ரயில்கள் அனைத்தும் வேறு வழியில் மாற்றிவிட ஏற்பாடு செய்யப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.