பெண்களுக்கு எதிரான அட்டூழியங்களைத் தடுக்க சட்டங்கள் மட்டும் தீர்வு அல்ல: வெங்கையா நாயுடு

பெண்களுக்கு எதிரான அட்டூழியங்களைத் தடுக்க சட்டங்களை கொண்டுவருவது மட்டும் தீர்வு அல்ல என்று துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.
பெண்களுக்கு எதிரான அட்டூழியங்களைத் தடுக்க சட்டங்கள் மட்டும் தீர்வு அல்ல: வெங்கையா நாயுடு

பெண்களுக்கு எதிரான அட்டூழியங்களைத் தடுக்க சட்டங்களை கொண்டுவருவது மட்டும் தீர்வு அல்ல என்று துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.

தில்லி சிம்பயாசிஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தின் 16வது மாநாட்டில் துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், 'நம் நாட்டின் பரம்பரியப்படி பெண்களை தாயாக, சகோதரியாகவே கருதுகிறோம்.ஆனால், சமீபத்திய நாட்களில் நடந்த சம்பவங்கள் வெட்கக்கேடானது. பெண்களுக்கு எதிரான இந்த பாகுபாடு மற்றும் அட்டூழியங்கள் உடனடியாக நிறுத்தப்பட நாம் அனைவரும் சேர்ந்து சபதம் எடுக்க வேண்டும். 

பெண்களுக்கு எதிரான குற்றங்களை முடிவுக்குக் கொண்டுவர அரசியல் விருப்பமும், நிர்வாகத் திறனும் சம அளவில் இருக்க வேண்டும். மனநிலையின் மாற்றமே காலத்தின் தேவை. 

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க புதிய சட்டங்களைக் கொண்டுவருவது மட்டும் தீர்வு அல்ல. எந்தவொரு புதிய சட்டத்தையும் மசோதாவையும் கொண்டுவருவதற்கு எதிரானவன் நான் அல்ல. நிர்பயா மசோதா கொண்டு வந்தோம். என்ன நடந்தது? பிரச்சினை தீர்க்கப்பட்டதா?இந்தியாவுக்கு சிலர் கெட்ட பெயரை ஏற்படுத்துகின்றனர். இந்தியா பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளின் நகரமாக மாறி வருகிறது என்று கூறுகிறார்கள். நம் நாட்டை நாமே இழிவுபடுத்தக்கூடாது. இதுபோன்ற சம்பவங்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது' என்று பேசியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com