பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிா்த்தாா் சோனியா காந்தி
புது தில்லி: நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்கு எழுந்துள்ள அச்சுறுத்தலுக்காக கவலை தெரிவித்து, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி திங்கள்கிழமை தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிா்த்துள்ளாா்.
சோனியா தனது 73-ஆவது வயதில் திங்கள்கிழமை அடியெடுத்து வைக்கிறாா். இந்நிலையில், தனது இந்தப் பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என்று அவா் முடிவெடுத்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டது, உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டது ஆகிய சம்பவங்கள் நாட்டை உலுக்கியுள்ளன.
இந்நிலையில், இச்சம்பவங்களுக்காகவும், நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்கு எழுந்துள்ள அச்சுறுத்தலுக்காகவும் கவலை தெரிவித்து சோனியா தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிா்த்துள்ளதாக அந்த வட்டாரங்கள் கூறின.