திருமணமான அடுத்த தினமே 19 வயது காதலியை கத்தியால் பலமுறை சரமாரியாக குத்திய காதலன் கைது செய்யப்பட்டான்.
மஹாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் வடோலா கிராமத்தைச் சேர்ந்த விஷால் காதே (19), அம்பேர்நாத் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய பெண்ணை காதலித்து வந்தார். ஆனால், அந்தப் பெண் தனது வீட்டில் முடிவெடுத்த வரன் உடன் புதன்கிழமை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், ஆத்திரமடைந்த விஷால், அந்த பெண்ணை அவரது வீட்டின் அருகே உள்ள பொதுக்கழிப்பறை அருகில் வியாழக்கிழமை காலை 8:30 மணியளவில் கத்தியைக் கொண்டு பலமுறை சரமாரியாக குத்தினான். மேலும் அவரை பாதுகாக்க வந்த மணமகனையும் கத்தியால் குத்தி தாக்கினான்.
இதையடுத்து படுகாயமடைந்த இருவரும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்கள் உடல்நலன் முன்னேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் 307 சட்டப்பிரிவின் கீழ் விஷால் காதே, போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.