நிர்பயா பாலியல் குற்றவாளிகளை தூக்கிலிட அனுமதி கோரி துப்பாக்கி சுடுதல் வீராங்கனை வர்திகா சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
நிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கிலிட வேண்டும் என்று விரும்புகிறேன். அந்த வாய்ப்பை எனக்கு தர வேண்டும். இதன்மூலம் ஒரு பெண்ணாலும் மரண தண்டனையை நிறைவேற்ற முடியும் என்று இந்நாடு அறிந்துகொள்ளும்.
பெண் எம்.பி.க்கள் மற்றும் நடிகைகள் என்னை ஆதரிக்க வேண்டும். இது சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வரும் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.