புது தில்லி: இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக பிபின் ராவத் பதவி வகித்து வருகிறார். தற்போது அவரது பதவிக்காலம் முடியும் நிலையில் புதிய தலைமைத் தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மனோஜ் தற்போது லெப்டினனட் ஜெனரலாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.