குடியரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் வெளிமாநிலத்தவர்களால் தான் வன்முறை ஏற்படுவதாக கர்நாடக உள்துறை அமைச்சர் பாஸவராஜ் பொம்மை வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,
கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் குடியரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றந. இதில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்களால் தான் போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டது. ஆனால், அனைத்தும் இன்று கட்டுப்பாட்டில் உள்ளன. சிறுபான்மையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.
முன்னதாக மங்களூருவில் வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் 20 போலீஸார் காயமடைந்தனர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இரண்டு பேர் உயிரிழந்தனர். கைது செய்யப்பட்டகேரளாவைச் சேர்ந்த இரண்டு பத்திரிகையாளர்களும் அவர்களின் சொந்த மாநிலத்துக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.