திருவனந்தபுரத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரோ பேருந்துகளை மறித்து கேரள மாணாவர்கள் சங்கத்தினர் (கேஎஸ்யு) பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பரவலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன்காரணமாக சில இடங்களில் வன்முறைகளும் ஏற்படுகின்றன.
இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கேரள மாணவர்கள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேரூர்கடா சந்திப்பு வழியாகச் சென்ற இஸ்ரோ பேருந்துகளை மறித்தனர். இதனால் அங்கு சில நேரம் பதற்றமான சூழல் காணப்பட்டது.