தேசத்தின் பாதுகாப்புக்காவும், ஒற்றுமைக்காகவும் மத்திய அரசுடன் நாங்கள் துணை நிற்போம்: குலாம் நபி ஆசாத்

தேசத்தின் பாதுகாப்புக்காவும், ஒற்றுமைக்காகவும் மத்திய அரசுடன் நாங்கள் துணை நிற்போம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சனிக்கிழமை தெரிவித்தார்.
தேசத்தின் பாதுகாப்புக்காவும், ஒற்றுமைக்காகவும் மத்திய அரசுடன் நாங்கள் துணை நிற்போம்: குலாம் நபி ஆசாத்

தேசத்தின் பாதுகாப்புக்காவும், ஒற்றுமைக்காகவும் மத்திய அரசுடன் நாங்கள் துணை நிற்போம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சனிக்கிழமை தெரிவித்தார்.

புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பான அனைத்து கட்சிக் கூட்டம் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில், பயங்கரவாதத்தை அழிப்பது தொடர்பாக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது உள்ளிட்ட முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், செய்தியாளர்களிடம் பேசியதாவது:

போர் அல்லாமல் 1947-க்கு பிறகு பாதுகாப்புப் படையை சேர்ந்த வீரர்கள் இந்த அளவு கொல்லப்பட்டது இதுதான் முதல்முறை. நாட்டின் பாதுகாப்புத்துறையுடன் காங்கிரஸ் கட்சி துணைநிற்கும். ஒட்டுமொத்த தேசமும் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கும்.

அனைத்து நாடுகளின் தலைவர்கள் மற்றும் மாநிலத் தலைவர்களுடனான கூட்டம் நடத்துவது தொடர்பாக பிரதமரிடம் தெரிவிக்குமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு மற்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இந்த ஒட்டுமொத்த தேசமும் இன்று சோகத்தில் ஆழ்ந்துள்ளது, மக்கள் மிகவும் ஆவேசமாக உள்ளனர்.

தேசத்தின் பாதுகாப்புக்காவும், ஒற்றுமைக்காகவும் மத்திய அரசுடன் நாங்கள் துணை நிற்போம். அது காஷ்மீராக இருந்தாலும் சரி, நாட்டின் வேறு எந்த மாநிலமாக இருந்தாலும் சரி, பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு உறுதுணையாக இருக்கும் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com