இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரஜௌரி மாவட்டத்தில் இருக்கும் நௌஷெரா செக்டரில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் இருந்து தக்க பதிலடி அளிக்கப்பட்டு வருகிறது. சமீபகாலமாக பாகிஸ்தான் ராணுவம் இதுபோன்று தொடர் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இதே பகுதியில் பயங்கரவாதிகள் தரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டை அப்புறப்படுத்தும் போது ராணுவ அதிகாரி மேஜர் சித்ரேஷ் சிங் பிஸ்ட் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.