கேரளாவில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் 2 பேர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களான கிரிபேஷ்(24), சரத் லால்(29) இருவரும் காசர்கோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர்.
இந்த கொலை சம்பவத்தில் கிரிபீஷ் சம்பவ இடத்திலேயை உயிரிழந்தார். சரத் லால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
இச்சம்பவம் காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் ரீதியான மோதலே இந்த கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை சம்பவத்தை கண்டித்து ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் காசர்கோடு மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.