உத்தரப் பிரதேசத்தில் ஆம்புலன்ஸ், கார் நேருக்கு நேர் மோதி விபத்து: 7 பேர் சாவு

உத்தரப் பிரதேசத்தில் சடலத்துடன் சென்ற ஆம்புலன்ஸ் எதிரே வந்த காருடன் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 
உத்தரப் பிரதேசத்தில் ஆம்புலன்ஸ், கார் நேருக்கு நேர் மோதி விபத்து: 7 பேர் சாவு

உத்தரப் பிரதேசத்தில் சடலத்துடன் சென்ற ஆம்புலன்ஸ் எதிரே வந்த காருடன் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 

உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் இருந்து சடலத்தை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று நொய்டா நோக்கி இன்று புறப்பட்டது. இந்த ஆம்புலன்ஸ் மதுரா அருகே யமுனா விரைவு சாலையில் சென்றுகொண்டிருந்த போது திடீரென சாலையின் தடுப்புச் சுவரை தாண்டி எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்த நிலையில் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com