புது தில்லி: இந்தியாவின முதல் புல்லட் ரயிலுக்கு பெயர் மற்றும் வடிவமைப்பை உருவாக்கும் போட்டியை தேசிய அதி விரைவு ரயில் கார்ப்பரேஷன் லிமிடட் அறிவித்துள்ளது.
2022ம் ஆண்டு மும்பையில் இருந்து அகமதாபாத்துக்கு இடையே இயக்கப்பட உள்ள புல்லட் ரயிலுக்கு பெயர் மற்றும் வடிவமைப்புப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகையும் அறிவிக்கப்படும்.
இது குறித்த அறிவிப்பு www.mygov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க மார்ச் 25ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.