புது தில்லி: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் பபுக் புயல் சின்னம் அந்தமானை நோக்கி நகர்ந்து வருகிறது.
அந்தமானுக்கு தென் கிழக்குப் பகுதியில் தற்போது கடலில் 720 கி.மீ. தூரத்தில் பபுக் புயல் மையம் கொண்டுள்ளது.
இன்று மாலை அல்லது இன்று நள்ளிரவு அந்தமான் தீவுகளில் புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.