இந்தியா
முதலை மறைவால் சோகத்தில் மூழ்கிய கிராமம்: மக்கள் திரளாக கலந்துகொண்டு அஞ்சலி
முதலை மறைவு காரணமாக சோகத்தில் மூழ்கிய கிராமத்தினர் திரளாக கலந்துகொண்டு அதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
முதலை மறைவு காரணமாக சோகத்தில் மூழ்கிய கிராமத்தினர் திரளாக கலந்துகொண்டு அதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பேமேதாரா மாவட்டத்தில் பாவா மொதாரா கிராமம் உள்ளது. இங்குள்ள நீர்நிலையில் வாழ்ந்து வந்த மிகப்பெரிய முதலை சனிக்கிழமை உயிரிழந்தது. அதற்கு வயது 130 ஆகும்.
கங்காராம் என்ற பெயர் கொண்ட அந்த முதலை பாவா மொதாரா கிராம மக்களிடையே மிகப் பிரபலம். இந்நிலையில், அந்த முதலையின் மறைவு கிராம மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது.
இதையடுத்து அந்த நீர்நிலையின் அருகிலேயே கங்காராம் என்ற அந்த முதலைக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கிராமத்தினர் அனைவரும் திரளாக கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.