காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படை வீரர்களுடன் சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படை வீரர்களுடன் சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 குல்காம் மாவட்டத்தின் காத்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு பாதுகாப்புப் படை வீரர்கள் சோதனையில் ஈடுபட்டபோது, அவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாதுகாப்புப் படையினரும் திருப்பிச் சுட்டனர்.
 இதைத் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் சடலங்கள் அருகில் கிடந்த ஆயுதங்கள் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டன.
 சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள், எந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்? அவர்கள் யார்? என்பது குறித்து தெரியவில்லை. அதுகுறித்து பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com