பொதுப் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் அரசாணை வெளியீடு

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் அரசாணை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
பொதுப் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் அரசாணை வெளியீடு

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் அரசாணை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார்.

இந்நிலையில், பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.

இதுதொடர்பாக மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com