இந்தியா
கொல்கத்தா கொடூரம்: 16 நாய்க்குட்டிகளைக் கொன்ற 2 செவிலிய மாணவிகள் கைது
கொல்கத்தாவில் 16 நாய்க்குட்டிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 2 செவிலிய மாணவிகள் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கொல்கத்தாவில் 16 நாய்க்குட்டிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 2 செவிலிய மாணவிகள் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டனர்.
என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் பிரசவ பிரிவுக்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டியில் ஜனவரி 13-ஆம் தேதி 16 நாய்க்குட்டிகளின் உடல்கள் மீட்கப்பட்டது. இதையடுத்து அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், 2 பெண்கள் நாய்க்குட்டிகளைத் கொடூரமாகத் தாக்கி கொலை செய்த விடியோப் பதிவுகள் வைரலாகப் பரவின. இதையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்தனர். இவர்கள் செவிலிய மாணவிகள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.