புது தில்லி: திறமை மிக்க இளைஞர்களின் கனவுகளை நனவாக்குவதையே பாஜக தனது முக்கியக் கொள்கையாகக் கொண்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக இளைஞர் அணியின் தேர்தல் பிரசாரம் துவக்கி வைக்கப்பட்டிருப்பதை அடுத்து மோடி தனது டிவிட்டரில் இதனைக் கூறியுள்ளார்.
பாஜகவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் இளைஞர்கள் சக்தியை உத்வேகப்படுத்த வேண்டும். இந்தியாவில் உள்ள திறமை மிக்க இளைஞர்களின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்பதையே பாஜக தனது முக்கியக் கொள்கையாகக் கொண்டுள்ளது என்று டிவீட் செய்துள்ளார்.