புதுதில்லி: தேர்தல் குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் தவறானது; இதுபோன்ற வதந்தியை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என காவல்துறையிடம் தேர்தல் ஆணையம் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து, மே மாதம் மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கான வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடக்க உள்ளதாக தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவியது.
இதையடுத்து மக்களவைத் தேர்தல் குறித்து சமூக ஊடகங்களில் வெளியான தகவல் முற்றிலும் தவறானது. அந்த தகவலில் உண்மையில் என்றும், இதுதொடர்பாக காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்று சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.