மகாராஷ்டிரத்தில் 4 நகராட்சிகள் மற்றும் ஒரு நகர பஞ்சாயத்திலுள்ள 90 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 39 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கர்ஜத், மல்காபூர், ஷிரிகோண்டா, அர்மோரி ஆகிய நகராட்சிகள் மற்றும் மஹாதுலா நகர பஞ்சாயத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது. திங்கள்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மொத்தமுள்ள 90 இடங்களில் 39 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் 30 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 10, சிவசேனை 7, இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் கட்சிகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.