230 மில்லியன் டன் எண்ணெய் படுகைகளை கண்டறிந்துள்ளது ஓஎன்ஜிசி

நாடு முழுவதும் 230 மில்லியன் டன்களுக்கும் அதிகமான எண்ணெய் படுகைகளை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) கண்டறிந்துள்ளதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்
230 மில்லியன் டன் எண்ணெய் படுகைகளை கண்டறிந்துள்ளது ஓஎன்ஜிசி

நாடு முழுவதும் 230 மில்லியன் டன்களுக்கும் அதிகமான எண்ணெய் படுகைகளை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) கண்டறிந்துள்ளதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மக்களவையில் அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டின் முன்னணி எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ஓஎன்ஜிசி, கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி நிலவரப்படி, 459.84 மில்லியன் டன்களுக்கு அதிகமான எண்ணெய் படுகைகளை கண்டறிந்துள்ளது. கடந்த நிதியாண்டில் (2018-19) மார்ச் 31ஆம் தேதி முடிவில், 21.11 மில்லியன் டன் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 65.66 மில்லியன் டன்கள் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
2021-2022ஆம் ஆண்டில், எரிவாயு இறக்குமதி சார்ந்திருப்பை 10 சதவீதம் குறைக்க செயல் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. நமது தேசம் தற்போது 83 சதவீதத்துக்கும் அதிகமான எண்ணெய் மற்றும்  எரிவாயு இறக்குமதியை சார்ந்திருக்கிறது.
இயற்கை எரிவாயு, பெட்ரோல்-டீசல் எரிபொருளுக்கான மாற்று ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வகுக்கும் பணியில் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
எண்ணெய் மற்றும் எரிவாயுவை உள்நாட்டில் தயாரிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய அரசு கடந்த பிப்ரவரியில் ஒப்புதல் அளித்தது என்றார் தர்மேந்திர பிரதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com