பேருந்து - சரக்கு லாரி நேருக்கு நேர் மோதல்: கர்நாடகாவில் 12 பேர் பலி 

கர்நாடக மாநிலத்தில் தனியார் பேருந்தும்  சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 12 பேர் பரிதாபமாக பலியானர்கள்.
பேருந்து - சரக்கு லாரி நேருக்கு நேர் மோதல்: கர்நாடகாவில் 12 பேர் பலி 

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் தனியார் பேருந்தும்  சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 12 பேர் பரிதாபமாக பலியானர்கள்.

கர்நாடகாவின் சிக்கபலாப்பூர் மாவட்டத்திலுள்ளது முருகமல்லா கிராமம். இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் தனியார் பேருந்து ஒன்றும், சரக்கு லாரியும் நேருக்கு நேராக மோதிக் கொண்டன . இந்த விபத்தில் மூன்று பெண்கள் உட்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காயமடைந்த பேருந்துப் பயணிகள் 10 பேர் அருகில் உள்ள சிந்தாமணி நகரத்தில் உள்ள  மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com