குறைந்தவிலை வீடுகளுக்கான வட்டியில் கூடுதலாக ரூ.1.50 லட்சம் வரி விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
2019-20ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் நிகழ்த்திய உரையில், ரூ.45 லட்சம் வரை மதிப்புள்ள குறைந்த விலை வீடுகளை வாங்குவோருக்கு கூடுதல் வரி விலக்கு.
கடன் தவணையில் ரூ.3.50 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படும். 15 ஆண்டுகள் வீட்டுக்கடனுக்கு ரூ.7 லட்சம் வரை மிச்சமாகும். இவ்வாறு அவர் கூறினார்.