கர்நாடக மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க ஆளும் மத்திய அரசு ஆர்வம் காட்டுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, மல்லிகார்ஜுன கார்கே இன்று பேசியதாவது,
"அரசமைப்புச் சட்டத்தின்படி அரசு செயல்பட வேண்டும். கர்நாடகாவில் அரசமைப்புச் சட்டத்தின்படி அரசு தேர்வு செய்யப்பட்டுள்ளது. பாஜக அதை சீர்குலைக்கிறது. 14 மாநிலங்களில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் அல்லாமல் பிராந்தியக் கட்சி உறுப்பினர்களுக்கும் பாஜக அழுத்தம் கொடுக்கிறது. இன்றும் சில எம்எல்ஏ-க்கள் மும்பைக்குச் சென்றுள்ளனர். அவர்களும் அழுத்தம் காரணமாகவே சென்றுள்ளனர். அதேசமயம், மத்திய அரசின் உதவியுடன் மாநில பாஜக தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கர்நாடகவில் இருக்கும் கூட்டணி அரசை கவிழ்க்க மத்திய அரசு ஆர்வம் காட்டுகிறது" என்றார்.
கர்நாடகாவில் நிகழும் குழப்பம்: http://bit.ly/30lGQsa