சிவசேனையில் இணைந்தார் மும்பை என்.சி.பி. தலைவர்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி.) மும்பைப் பிரிவு தலைவர் சச்சின் அஹிர், சிவசேனை கட்சியில் வியாழக்கிழமை இணைந்தார்.
சிவசேனையில் இணைந்தார் மும்பை என்.சி.பி. தலைவர்


தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி.) மும்பைப் பிரிவு தலைவர் சச்சின் அஹிர், சிவசேனை கட்சியில் வியாழக்கிழமை இணைந்தார்.
மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, சிவசேனை இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியில் சச்சின் அஹிர் இணைந்தார்.
 அவர் பேசுகையில், மற்ற கட்சிகளை பிளக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம் அல்ல; சிவசேனை கட்சி வளர்ச்சியடைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பமாகும். எனினும் அறநெறிகள், ஒழுக்கம் ஆகியவற்றை மீறி கட்சி வளர வேண்டும் என்று விரும்பியதில்லை. சச்சின் அஹிர் விருப்பத்துடனும், மகிழ்ச்சியுடனுமே சிவசேனையில் இணைந்துள்ளார். தமது முடிவுக்காக அவர் வருத்தமடைய மாட்டார் என்றார்.
சச்சின் அஹிர் பேசுகையில், சிவசேனையின் வளர்ச்சிக்காகப் பணியாற்றுவேன்; தேசியவாத காங்கிரஸை உடைக்க முயற்சிக்க மாட்டேன். (தேசியவாத காங்கிரஸ் தலைவர்) சரத்பவார் எனது இதயத்தில் உள்ளார் என்றார்.
தேசியவாத காங்கிரஸ் கருத்து: இதனிடையே, சிவசேனை கட்சியில் சச்சின் அஹிர் இணைந்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக், இதனால் கட்சியின் தேர்தல் வெற்றிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com