சென்னையில் இருந்து வாராணசி, அகமதாபாத்துக்கு நேரடி விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு

சென்னை - வாராணசி, சென்னை - அகமதாபாத் இடையே நேரடி பயணிகள் விமான சேவையை வியாழக்கிழமை முதல் இயக்க எர் இந்தியா முடிவு செய்துள்ளது.
சென்னையில் இருந்து வாராணசி, அகமதாபாத்துக்கு நேரடி விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு


சென்னை: சென்னை - வாராணசி, சென்னை - அகமதாபாத் இடையே நேரடி பயணிகள் விமான சேவையை வியாழக்கிழமை முதல் இயக்க எர் இந்தியா முடிவு செய்துள்ளது.

அதன்படி, வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் இந்த விமான சேவை இயக்கப்படும்.  சென்னையில் இருந்து மாலை 4.50 மணிக்கு புறப்பட்டு, வாராணசிக்கு இரவு 7 மணிக்கு சென்றடையும். ஞாயிற்றுக் கிழமை மட்டும் காலை 10.20க்கு புறப்பட்டு மதியம் 12.35க்கு சென்றடையும்.

இதேப்போல, சென்னை - பெங்களூரு, சென்னை - அகமதாபாத், சென்னை - கொல்கத்தா மார்கங்களிலும் புதன்கிழமை முதல் விமான சேவையை ஏர் இந்தியா துவக்க உள்ளது.

சென்னை - அகமதபாத் இடையே ஞாயிற்றுக்கிழமை தவிர இதர நாட்களில் விமானம் இயக்கப்பட உள்ளது. சென்னை - கொல்கத்தா இடையே வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய 4 நாட்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com