காணாமல் போன ஏஎன்-32 விமானம் பற்றி தகவல் கொடுப்போருக்கு ரூ. 5 லட்சம் வெகுமதி

அஸ்ஸாம் மாநிலத்தில், இந்திய விமானப் படையைச் சேர்ந்த ஏஎன்-32 என்ற விமானம் 13 பேருடன் மாயமானதை அடுத்து, விமானத்தை தேடும் பணியில் இரு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 
காணாமல் போன ஏஎன்-32 விமானம் பற்றி தகவல் கொடுப்போருக்கு ரூ. 5 லட்சம் வெகுமதி


அஸ்ஸாம் மாநிலத்தில், இந்திய விமானப் படையைச் சேர்ந்த ஏஎன்-32 என்ற விமானம் 13 பேருடன் மாயமானதை அடுத்து, விமானத்தை தேடும் பணியில் இரு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

அஸ்ஸாமின் ஜோர்ஹாட் விமானப் படை தளத்தில் இருந்து ஏஎன்-32 ரகத்தைச் சேர்ந்த போக்குவரத்து பயன்பாட்டுக்கான விமானம் புறப்பட்டுச் சென்றது. அருணாசல பிரதேச மாநிலம் மெசுகாவில் உள்ள ராணுவ தளத்தை நோக்கிச் சென்ற அந்த விமானத்தில் 8 விமானப் பணியாளர்களும், 5 பயணிகளும் பயணித்தனர். விமானம் புறப்பட்ட 35 நிமிடத்திலேயே ரேடார் கண்காணிப்பில் இருந்து மறைந்தது. அத்துடன், விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான தனது தொடர்பையும் இழந்தது. 

மாயமான அந்த விமானத்தை தேடும் பணியில் சுகோய்-30, சி-130 ஆகிய இரு ரகத்தைச் சேர்ந்த விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்திய ராணுவம் மற்றும் இந்தோ-திபெத் எல்லை காப்புப் படையைச் சேர்ந்த வீரர்களும் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் 13 பேருடன் மாயமான விமானம் பற்றி தகவல் தருவோருக்கு 5 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என விமானப் படை அறிவித்துள்ளது. விமானம் குறித்த தகவல் தெரிந்தால்  0378-3222164, 9436499477, 9402077267 மற்றும் 9402132477 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com