குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்த சந்திப்பு புதன்கிழமை காலை நடைபெற்றது. இதுகுறித்து சுட்டுரையில் அமித் ஷா வெளியிட்ட பதிவில், குடியரசுத் தலைவரை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு, குடியரசுத் தலைவரை அமித் ஷா சந்தித்துப் பேசுவது இதுவே முதல்முறையாகும். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகள் கூறியுள்ளனர்.