தெற்கு காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச்சூடு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வரும் துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தெற்கு காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச்சூடு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வரும் துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்திய எல்லைக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளை தடுக்கும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவத்தினா் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தெற்கு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள சோஃபியான் மாவட்டத்தின் கீகம் எனுமிடத்தில் உள்ள தரம்தோரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் ரகசிய தேடுதல் வேட்டையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர். 

இதையடுத்து அங்கிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படை தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டு வருகிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com