காஷ்மீரின் குப்வாராவில் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர்

காஷ்மீரின் குப்வாரா பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
காஷ்மீரின் குப்வாராவில் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர்

காஷ்மீரின் குப்வாரா பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

காஷ்மீர் புல்வாமா பகுதியில் கடந்த 14-ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான கார் குண்டு தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் பலியாகினர். 

அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் படையினர், காஷ்மீர் எல்லையில் அத்துமீறி குண்டு வீச்சு நடத்துகின்றனர். பீரங்கி தாக்குதலும் நடத்துகின்றனர். இந்நிலையில் குப்வாரா மாவட்டம் ஹந்த்வாரா பகுதியில், பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நேற்று கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.  

இதில் 4 பாதுகாப்புப் படைவீரர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். துப்பாக்கிச்சூடு முடிந்த நிலையில், பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com